அன்புடையீர் வணக்கம் .
ஐ நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறி
ஈழ தமிழர் களுக்கு வெற்றி கிடைக்கும் என
நீங்கள் நினைத்திருந்தால் நீங்களே ஏமாளி
அப்படியே தீர்மானம் வெற்றி பெற்றிருந்தாலும் பலன் ஒன்றுமில்லை
அவனை ஒன்றுமே செய்ய இயலாது யாராலும்.
உலக நாடுகள் யாருக்குமே ஈழத்தைப்பற்றி கவலை இல்லை
ஏனெனில் ஈழத்திலே மனிதர்கள் கொத்து கொத்தாக செத்துக்கொண்டிருந்த
செய்தி இன்றைக்கு தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கோ தெரியாதா என்ன?
சாகிறபோது காப்பாற்றாமல் எல்லாரும் செத்து ஒழிந்த பிறகு அவன் மேல் போர் குற்றம் சுமத்தி என்ன பயன் ?
மாண்டவர் மீண்டு வருவாரோ?
போர் குற்றம் இந்தியாமீதுதான் சுமத்தப்படவேண்டும் ..இலஙையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் அவ்வளவுதான்.. ஏனெனில் போரை நடத்தி தமிழர்களை கொன்றது இந்தியா தான்.
குற்றபட்டியலில் சீனா,பாகிச்தான் ஆகிய நாடுகளையும் சேர்த்திருந்தால்
நாம் வென்றிருக்கலாம்..
இவ்வளவு மனிதப்படுகொலை நடந்த பிறகு நேரில் சென்று பார்வை இட்டு நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு வாகெடுப்பு நடத்துவது மாபெரும் முட்டாள் தனம் இல்லையா தோழர்களே?
தயவு செய்து இது யாருடைய சதி வேலை ?
இந்தியா பெரிய அண்ணனா? அமெரிக்கா பெரிய அண்ணனா?
தோழமையுடன்
இராவணன்
தமிழனின் முகவரி
மானுட தந்தை பெரியார்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்
Friday, May 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment