நோக்கம்
அறிவுலகின் ஆசானாய் தமிழர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தத்துவ மேதை பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் பற்றி இதோ எமது படைப்புக்களை இங்கே பதிவு செய்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை இங்கே எமது பார்வைக்கு வைக்க உம்மை அழைக்கிறோம்

தமிழனின் முகவரி
மானுட தந்தை பெரியார்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்

Wednesday, November 26, 2008

நன்றியை நாடும் இனமும் அறியட்டும்

ம தி மு க பொதுச் செயலாளர் வை கோ அவர்கள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை உணர்ச்சி மிக்கது, வரலாற்று சிறப்புமிக்கது என்று அந்த உறுப்பினர்களால் பாராட்டபட்டுள்ளது ..

இலங்கை யில் தனி ஈழம் ஒன்றே தீர்வு என தெளிவாகவும் அதுவும் புலிகளால் மட்டுமே உண்மையான ஒரு தமிழர்களுக்கான அரசை நிறுவ முடியும் என்பதை தீர்க்கமாகவும் உரை நிகழ்த்தி உள்ளார்.

பிரிட்டிசு காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழீழ மக்கள் மீது திணிக்கப்பட்ட்
அநீதிக்கு இப்போதைய பாராளுமன்றம் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்., 1833 ல் தனித் தனியான தமிழ் மற்றும் சிங்கள ராஜ்ஜியங்களை அவர்களின் நிர்வாக வசதிக்காக சிலோன் என்ற பெயரில் ஒன்றாக்கி பிறகு 1948 ல் பிரிட்டிஷார் இலங்கையை விட்டு அகலும்போது அதிகாரத்தை சிங்கள பேரினவாத அரசிடம் விட்டுவிட்டு சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரை தமிழ் ஈழத்தை பொறுத்த் வரை இலங்கை வரலாற்றை பற்றி சிறந்த புள்ளி விவரங்களை அளித்ததாக தெரிவித்து சிறப்பு கவனம் செலுத்த ஏதுவாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


உலகத் தமிழர்களின் சார்பாக தோழர் வைகோ அவர்களுக்கு நம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

No comments: